என் சோகக்கதையை ஒரு ஐந்து நிமிடம் படிச்சுட்டுப்போங்க!
ஆசைப்பட்டு, தவமிருந்து ஒன்றை வாங்குகிறீர்கள்!
அதை ஆயுளுக்கும் உங்களால் பயன்படுத்தமுடியாது!!
எப்படி இருக்கும் உங்களுக்கு!!!
இப்படி ஒரு நிலை!
நான் பெற்ற செல்வங்களால்!
ஐந்துவருடம் கஷ்டப்பட்டு, இல்லாத மூளையை கசக்கி யோசிச்சு ஒரு பேர் select பண்ணி வைச்சேனுங்க என் மகளுக்கு!
ஒரு ரெண்டு வருஷம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!
வெச்சபேர நானே மறக்கற அளவுக்கு, எப்ப பார்த்தாலும்,
"தங்கம்மா, செல்லம், மயிலு" -இப்படி கொஞ்சிக்கொஞ்சி அது எப்படியோ பதிஞ்சே போச்சு குழந்தை மனசுல!
மூணு வயதிருக்கும் பொண்ணுக்கு!
ஒருநாள் நான் ஒரிஜனலா, ஆசையா வச்ச பேரைச்சொல்லி கூப்பிட்டேன்!
திரும்பி முறைச்சுப்பாத்த பொண்ணு கண்ணிலிருந்து மாலை மாலையா கண்ணீர்!
ஒரே ஓட்டம் கிச்சனுக்குள்ள!!
நமக்கு மொதல்ல பொண்டாட்டி மேலதானே சந்தேகமே வரும்?
"ஏண்டி, புள்ளய எதாவது திட்டுனயான்னு" எகிற,
பலவருஷமா பதிலே தெரியாம கேக்கற அதே கேள்விய என்னை கேக்கறா, - "உங்களுக்கு எதாச்சும் அறிவு இருக்கா?"
கல்யாணத்துக்கப்புறம் எந்த ஆம்பளக்கு இருக்குதுன்னு (மனசுக்குள்ளதான்) சொல்லிக்கிட்டு,
"ஏன்டா அழறே"ன்னு பொண்ண கேட்டா, "நீ ஏன் என்ன பேர் சொல்லிக்கூப்பிட்டே"ன்னு ஒரே அழுகை!
தோப்புக்கரணம், குட்டிகரணமெல்லாம் போட்டு ஒருவழியா சமாதானம் பண்ணி, இனி உன்ன பேர்சொல்லி கூப்பிட மாட்டேன்னு சத்தியம் பண்ணி சிரிக்கவைக்கறதுக்குள்ள, பொறந்தநாள் கண்டுடுச்சு!
பொண்ணுக்கு இப்போ பத்தொன்பது வயசாய்ப்போச்சு!
நான் ஆசையா வெச்சபேரச் சொல்லி, நண்டு சிண்டிலிருந்து நாளைக்கு சாகப்போறது வரைக்கும் கூப்பிடுதுக!!
இன்னும் மொத்தமா ஒரு அஞ்சாறு தடவை நான் அந்தப்பேர சொல்லியிருந்தா அதிகம்!!
எங்க போனாலும், டேய், தங்கம்மா, மயிலு, ராஜாத்தி,.. இப்படித்தான்!!
இதோட கதை முடியலங்க!
நமக்குத்தான் பட்டாலும் புத்தி வராதே -
அடுத்ததா பொறந்த பையனையாவது பொறந்ததிலிருந்தே பேரச்சொல்லி கூப்பிட்டருக்கலாம்ல?
வீட்டம்மா அதுலல்லாம் படு விபரம்!
நமக்குத்தான் கொழந்தைய கண்டுட்டா கள்ளு குடிச்ச நரி மாதிரி ஆயிடுவோமே!
அவனையும் ராஜா, செல்லம், மயிலுக்குட்டின்னு ஆரம்பிச்சு, பத்தாத குறைக்கு,
அக்காக்காரி வேற,
"என்னையெல்லாம் அப்பா பேர் சொல்லி கூப்பிடமாட்டாரே"!!!!
இது போதாதா இளசுக்கு?
இப்ப என் பொண்டாட்டி ரெண்டுபேரையும் பேரச்சொல்லி - " அடியே! நான் வச்ச பேருடி"ன்னு மனசுக்குள்ள கத்த - கூப்பிடும்போது,
டேய் மயிலுக்குட்டி ன்னா பொண்ணும்'
அடி குட்டி மயிலு ன்னா பையனும் ஏன்னு கேக்கற நெலமை!!
யாராச்சும் "இன்னார் உங்க கொழந்தையா?" ன்னு கேட்டாகூட,
அந்த பேரு நான் வெச்சதுதான்!
ஆனா நான் அப்படி கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிடறேன்!
என்ன கொடுமை சார் இது!!!!!!!!!!
ஆசைப்பட்டு, தவமிருந்து ஒன்றை வாங்குகிறீர்கள்!
அதை ஆயுளுக்கும் உங்களால் பயன்படுத்தமுடியாது!!
எப்படி இருக்கும் உங்களுக்கு!!!
இப்படி ஒரு நிலை!
நான் பெற்ற செல்வங்களால்!
ஐந்துவருடம் கஷ்டப்பட்டு, இல்லாத மூளையை கசக்கி யோசிச்சு ஒரு பேர் select பண்ணி வைச்சேனுங்க என் மகளுக்கு!
ஒரு ரெண்டு வருஷம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது!
வெச்சபேர நானே மறக்கற அளவுக்கு, எப்ப பார்த்தாலும்,
"தங்கம்மா, செல்லம், மயிலு" -இப்படி கொஞ்சிக்கொஞ்சி அது எப்படியோ பதிஞ்சே போச்சு குழந்தை மனசுல!
மூணு வயதிருக்கும் பொண்ணுக்கு!
ஒருநாள் நான் ஒரிஜனலா, ஆசையா வச்ச பேரைச்சொல்லி கூப்பிட்டேன்!
திரும்பி முறைச்சுப்பாத்த பொண்ணு கண்ணிலிருந்து மாலை மாலையா கண்ணீர்!
ஒரே ஓட்டம் கிச்சனுக்குள்ள!!
நமக்கு மொதல்ல பொண்டாட்டி மேலதானே சந்தேகமே வரும்?
"ஏண்டி, புள்ளய எதாவது திட்டுனயான்னு" எகிற,
பலவருஷமா பதிலே தெரியாம கேக்கற அதே கேள்விய என்னை கேக்கறா, - "உங்களுக்கு எதாச்சும் அறிவு இருக்கா?"
கல்யாணத்துக்கப்புறம் எந்த ஆம்பளக்கு இருக்குதுன்னு (மனசுக்குள்ளதான்) சொல்லிக்கிட்டு,
"ஏன்டா அழறே"ன்னு பொண்ண கேட்டா, "நீ ஏன் என்ன பேர் சொல்லிக்கூப்பிட்டே"ன்னு ஒரே அழுகை!
தோப்புக்கரணம், குட்டிகரணமெல்லாம் போட்டு ஒருவழியா சமாதானம் பண்ணி, இனி உன்ன பேர்சொல்லி கூப்பிட மாட்டேன்னு சத்தியம் பண்ணி சிரிக்கவைக்கறதுக்குள்ள, பொறந்தநாள் கண்டுடுச்சு!
பொண்ணுக்கு இப்போ பத்தொன்பது வயசாய்ப்போச்சு!
நான் ஆசையா வெச்சபேரச் சொல்லி, நண்டு சிண்டிலிருந்து நாளைக்கு சாகப்போறது வரைக்கும் கூப்பிடுதுக!!
இன்னும் மொத்தமா ஒரு அஞ்சாறு தடவை நான் அந்தப்பேர சொல்லியிருந்தா அதிகம்!!
எங்க போனாலும், டேய், தங்கம்மா, மயிலு, ராஜாத்தி,.. இப்படித்தான்!!
இதோட கதை முடியலங்க!
நமக்குத்தான் பட்டாலும் புத்தி வராதே -
அடுத்ததா பொறந்த பையனையாவது பொறந்ததிலிருந்தே பேரச்சொல்லி கூப்பிட்டருக்கலாம்ல?
வீட்டம்மா அதுலல்லாம் படு விபரம்!
நமக்குத்தான் கொழந்தைய கண்டுட்டா கள்ளு குடிச்ச நரி மாதிரி ஆயிடுவோமே!
அவனையும் ராஜா, செல்லம், மயிலுக்குட்டின்னு ஆரம்பிச்சு, பத்தாத குறைக்கு,
அக்காக்காரி வேற,
"என்னையெல்லாம் அப்பா பேர் சொல்லி கூப்பிடமாட்டாரே"!!!!
இது போதாதா இளசுக்கு?
இப்ப என் பொண்டாட்டி ரெண்டுபேரையும் பேரச்சொல்லி - " அடியே! நான் வச்ச பேருடி"ன்னு மனசுக்குள்ள கத்த - கூப்பிடும்போது,
டேய் மயிலுக்குட்டி ன்னா பொண்ணும்'
அடி குட்டி மயிலு ன்னா பையனும் ஏன்னு கேக்கற நெலமை!!
யாராச்சும் "இன்னார் உங்க கொழந்தையா?" ன்னு கேட்டாகூட,
அந்த பேரு நான் வெச்சதுதான்!
ஆனா நான் அப்படி கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிடறேன்!
என்ன கொடுமை சார் இது!!!!!!!!!!