வாழ்க்கையின் அர்த்தம்!
"இதுவரைக்கும் என் மனைவிக்கு ஆறுமுறை அபார்ஷன் ஆயிருக்குடா நொன்னைங்களா"என்று சசிகுமார் குரலில் கத்தத்தோன்றும் ஒவ்வொருமுறையும், "எல்லாம் சரியாய்த்தானே மாப்ள போயிட்டுருக்கு?" என்ற நக்கல் கேள்விகளுக்கு!
இதுவரை பரம்பரையில் பிள்ளையில்லா நிலை யாருக்கும் வந்ததில்லை!
தாத்தா பத்தைப் பெற்றவர்!
அதிலிருந்து வம்சவிருத்திக்கு ஒரு குறையும் இல்லை!
மனைவி குடும்பத்திலும் குறையற்ற மக்கட்செல்வம்!
வீடுமுழுக்க பெண்குழந்தைகளாய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவன் திருமணத்தின் ஓரம்சத்திட்டம்!
வயது, ரசனை வித்தியாச ஆரம்ப முரண்பாடுகளிலும், முதல் குழந்தை பெண்ணாய் என்பதில் மனைவியும் ஒத்துப்போனது அதிர்ஷ்டம்!
அது ஏன் பெண்குழந்தை?
கணவனற்ற பாட்டியும், திருமணத்துக்கு காத்திருந்த சித்திகளும் சீராட்டி வளர்த்த பால்யம்!
எங்கு போனாலும், குழந்தைகளுடனும், பெண்களுடனுமே தோழமை!
சொந்தங்களில், குழந்தைகளின் காதலன், பெண்களின் தோழன்!
பிறந்த குழந்தையை, பயமின்றிக் கை நீட்டி வாங்கி கொஞ்சுமளவு குழந்தைகள் மேல் அதீத அன்பு!
எனவே, திருமணத்தின் முதலும் முக்கியமானதுமான கனவே குழந்தைப்பேறு என்றானதில் வியப்பில்லை!
முதல் வருடமே முள் மேல் கழிந்தது!
தொடர்ந்த வருடங்களில், அன்பான, அக்கறையான, கேலியான விசாரிப்புகளும், விசேஷங்களிலும் குறிப்பாக வளைகாப்புகளிலும், நேரிடை, மறைமுக ரணங்களும்!
ஆயிரம் கோயில்கள், அனுதினம் பரிகாரங்கள்!
மருத்துவர் குறித்தநாளில் கட்டாய உறவுக்காய் பறந்தும், பயணித்தும் வந்த நாட்கள்!
மனைவிக்குத் தைராய்டு குறைபாடென்று வரிசையாய் குறை பிரசவங்கள்!
நான்கு வருடங்கள் முள்ளில் நகர, சென்னையின் மிகப்பிரபல மருத்துவரிடம் வருடத்தின் முதல்நாள் காலை முதல் மாலைவரை இருவருக்கும் ஆயிரம் சோதனைகள்!
இறுதியாய் மருத்துவர் இடியை இறக்கினார்!
" உங்கள் இருவருக்கும் இயற்கை கரு வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை! செயற்கை கருத்தரிப்பே ஒரே வழி!"
உடைந்துபோனது மனம் என்பது மிக சாதாரண வார்த்தை!
எந்த மருத்துவத்தையும் நாட மனமின்றி கழிந்தது காலம்- விரக்தியில்!
சம்பவங்களால் உருண்ட ஓராண்டுக்குப்பின் மனைவி மீண்டும் கர்ப்பம்!
இம்முறை தெய்வம் அருகிலேயே வசித்தது- அன்பான பெண் மருத்துவர் வடிவில்!
வாரம்தோறும் ஊசி! மாதம் இரு ஸ்கேன் !
எனினும் நம்பிக்கையற்றே நகர்ந்தன நாட்கள்!
முதல் முறையாய், நான்கு மாதங்களை தொட்டது கர்ப்பம்!
துளிர்க்க ஆரம்பித்தது நம்பிக்கை!
தொடர்ந்த கண்காணிப்பு, ஒன்பது மாதங்களையும் நகர்த்த,
அன்றைய காலையே மனைவியின் அலறலோடு ஆரம்பித்தது!
அருகிலேயே இருந்த அன்பான மருத்துவர் மருத்துவமனையில் அட்மிஷன்!
நேரம் மனைவியின் கதறலோடு நகர,
இவன் முகத்தில் கவலைக்கண்ணீர்!
வலி பொறுக்காத மனைவியும், பார்க்க சகிக்காத அவனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்ட, முதல் முறையாய் மருத்துவரின் கோபமுகம்!
"என்ன செய்யவேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லவேண்டாம்!" என்ற ஒற்றை வரி பதில்!
"வலி பொறுக்கப் பழகு" என்ற ஒற்றை அறிவுரை!
மதியம் கடக்க, பக்கத்திலேயே இருந்த தாதி மருத்துவரிடம் விரைய,
மதியம் இரண்டு மணிக்கு பிரசவ வார்டுக்குள் மனைவி,
வலியும் தவிப்புமாய் வாசலில் இவன்!!
பத்து யுகமாய் நீண்ட பத்து நிமிடங்கள்!
ஓங்கி ஒலித்த ஒற்றைக்கதறல்!
இவன் இதயத்துடிப்பு காதில் எதிரொலிக்க, மூடிய கதவை வெறித்துக்கொண்டு ஐந்தாண்டு தவம்!
கதவு திறந்தது!
புன்னகை முகத்துடன் வந்த அந்த மருத்துவ தெய்வத்தின் கையில்,
இவன் உயிர்!
நடுங்கும் கைகளில் வாங்கிய குழந்தையின் மேனியில் பட்டுத் தெறித்தது ஆனந்தக்கண்ணீர்!
ஐந்தாண்டுகளுக்கு முன் முடிவு செய்த முதல் பெயரை காதோடு சொன்னான்!!
என்னைப் பெற்ற என் மகளின் பிறந்த தினம்!
அக்டோபர் 6!
இதுவரை பரம்பரையில் பிள்ளையில்லா நிலை யாருக்கும் வந்ததில்லை!
தாத்தா பத்தைப் பெற்றவர்!
அதிலிருந்து வம்சவிருத்திக்கு ஒரு குறையும் இல்லை!
மனைவி குடும்பத்திலும் குறையற்ற மக்கட்செல்வம்!
வீடுமுழுக்க பெண்குழந்தைகளாய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவன் திருமணத்தின் ஓரம்சத்திட்டம்!
வயது, ரசனை வித்தியாச ஆரம்ப முரண்பாடுகளிலும், முதல் குழந்தை பெண்ணாய் என்பதில் மனைவியும் ஒத்துப்போனது அதிர்ஷ்டம்!
அது ஏன் பெண்குழந்தை?
கணவனற்ற பாட்டியும், திருமணத்துக்கு காத்திருந்த சித்திகளும் சீராட்டி வளர்த்த பால்யம்!
எங்கு போனாலும், குழந்தைகளுடனும், பெண்களுடனுமே தோழமை!
சொந்தங்களில், குழந்தைகளின் காதலன், பெண்களின் தோழன்!
பிறந்த குழந்தையை, பயமின்றிக் கை நீட்டி வாங்கி கொஞ்சுமளவு குழந்தைகள் மேல் அதீத அன்பு!
எனவே, திருமணத்தின் முதலும் முக்கியமானதுமான கனவே குழந்தைப்பேறு என்றானதில் வியப்பில்லை!
முதல் வருடமே முள் மேல் கழிந்தது!
தொடர்ந்த வருடங்களில், அன்பான, அக்கறையான, கேலியான விசாரிப்புகளும், விசேஷங்களிலும் குறிப்பாக வளைகாப்புகளிலும், நேரிடை, மறைமுக ரணங்களும்!
ஆயிரம் கோயில்கள், அனுதினம் பரிகாரங்கள்!
மருத்துவர் குறித்தநாளில் கட்டாய உறவுக்காய் பறந்தும், பயணித்தும் வந்த நாட்கள்!
மனைவிக்குத் தைராய்டு குறைபாடென்று வரிசையாய் குறை பிரசவங்கள்!
நான்கு வருடங்கள் முள்ளில் நகர, சென்னையின் மிகப்பிரபல மருத்துவரிடம் வருடத்தின் முதல்நாள் காலை முதல் மாலைவரை இருவருக்கும் ஆயிரம் சோதனைகள்!
இறுதியாய் மருத்துவர் இடியை இறக்கினார்!
" உங்கள் இருவருக்கும் இயற்கை கரு வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை! செயற்கை கருத்தரிப்பே ஒரே வழி!"
உடைந்துபோனது மனம் என்பது மிக சாதாரண வார்த்தை!
எந்த மருத்துவத்தையும் நாட மனமின்றி கழிந்தது காலம்- விரக்தியில்!
சம்பவங்களால் உருண்ட ஓராண்டுக்குப்பின் மனைவி மீண்டும் கர்ப்பம்!
இம்முறை தெய்வம் அருகிலேயே வசித்தது- அன்பான பெண் மருத்துவர் வடிவில்!
வாரம்தோறும் ஊசி! மாதம் இரு ஸ்கேன் !
எனினும் நம்பிக்கையற்றே நகர்ந்தன நாட்கள்!
முதல் முறையாய், நான்கு மாதங்களை தொட்டது கர்ப்பம்!
துளிர்க்க ஆரம்பித்தது நம்பிக்கை!
தொடர்ந்த கண்காணிப்பு, ஒன்பது மாதங்களையும் நகர்த்த,
அன்றைய காலையே மனைவியின் அலறலோடு ஆரம்பித்தது!
அருகிலேயே இருந்த அன்பான மருத்துவர் மருத்துவமனையில் அட்மிஷன்!
நேரம் மனைவியின் கதறலோடு நகர,
இவன் முகத்தில் கவலைக்கண்ணீர்!
வலி பொறுக்காத மனைவியும், பார்க்க சகிக்காத அவனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்ட, முதல் முறையாய் மருத்துவரின் கோபமுகம்!
"என்ன செய்யவேண்டும் என்று எனக்கு நீங்கள் சொல்லவேண்டாம்!" என்ற ஒற்றை வரி பதில்!
"வலி பொறுக்கப் பழகு" என்ற ஒற்றை அறிவுரை!
மதியம் கடக்க, பக்கத்திலேயே இருந்த தாதி மருத்துவரிடம் விரைய,
மதியம் இரண்டு மணிக்கு பிரசவ வார்டுக்குள் மனைவி,
வலியும் தவிப்புமாய் வாசலில் இவன்!!
பத்து யுகமாய் நீண்ட பத்து நிமிடங்கள்!
ஓங்கி ஒலித்த ஒற்றைக்கதறல்!
இவன் இதயத்துடிப்பு காதில் எதிரொலிக்க, மூடிய கதவை வெறித்துக்கொண்டு ஐந்தாண்டு தவம்!
கதவு திறந்தது!
புன்னகை முகத்துடன் வந்த அந்த மருத்துவ தெய்வத்தின் கையில்,
இவன் உயிர்!
நடுங்கும் கைகளில் வாங்கிய குழந்தையின் மேனியில் பட்டுத் தெறித்தது ஆனந்தக்கண்ணீர்!
ஐந்தாண்டுகளுக்கு முன் முடிவு செய்த முதல் பெயரை காதோடு சொன்னான்!!
"தென்றல்!"
என்னைப் பெற்ற என் மகளின் பிறந்த தினம்!
அக்டோபர் 6!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக