New Year Resolution
இந்த வருஷம் என்ன
தீர்மானம் பண்ணலாம்ன்னு மண்டைக்குள்ள குடைய ஆரம்பிச்சிரும்.
லவ் பண்ணக்கூட
அவ்வளவு மெனக்கெட்டதில்லை.
எங்க இன்ஸ்டிட்யூட்
பொண்ணுங்கெல்லாம் எப்போதுமே செட் ஆகாது. அதுங்க வாயைத்திறந்தாலே, டெபிட், கிரடிட், கம்பெனி லா அப்படித்தான் பேசுங்க.
சப்ஜெக்ட் பத்தியே
பேசற ஆப்ஜெக்ட் எல்லாம் நம்ம டார்கெட்லயே வராது.
ஸ்டெல்லா மாரிஸ்,
எத்திராஜ், Q.M.C. அவ்வளவுதான் நம்ம சாய்ஸ்.
அன்னைக்கு எந்த
காலேஜ் பக்கம் எவன் போறான்னு பாத்து அங்க போய் ஓசில இறங்கிக்குவேன்,
இல்லைன்னா, இருக்கவே இருக்கா, லலிதா,
“ஏய்,
என்னைக் கொண்டுபோய் ஏதோ ஒரு காலேஜ்
வாசல்ல விடுடீ” ன்னா, திட்டிக்கிட்டே கொண்டு விட்டுருவா.
அன்னைக்கு அந்தக்
காலேஜ் வாசல்ல எந்தப் பொண்ணு பளிச்சுன்னு இருக்கோ, அது கூட டூயட் பாடிக்கிட்டே, (மனசுக்குள்ளதான்)
வீட்டுக்குப் பொடிநடையா போய் சேரவேண்டியதுதான்.
மறுநாள் வேற காலேஜ்,
வேற டூயட்!
நமக்கு எப்படியும்
வீட்டுல பார்க்கற அருக்காணிதான்!.
அப்புறம் எதுக்கு இந்தக் கெரகம் புடிச்ச சீரியஸ் லவ் ரிஸ்க் எல்லாம்.!
அப்புறம் எதுக்கு இந்தக் கெரகம் புடிச்ச சீரியஸ் லவ் ரிஸ்க் எல்லாம்.!
உன் மொகரைய
எந்தப்பொண்ணு லவ் பண்ணும்ன்னு உண்மையை கண்டுபிடிச்சுட்டதா நினைச்சுக் கேட்டீங்கன்னா,
உங்களைக் கேட்டாங்களா முருகேஷா,(ஷி) ???
நாங்களும் தினசரி
கண்ணாடி பார்ப்போம், எங்களுக்கும்
தெரியும்.
பாருங்க இந்த ஒரு
வார்த்தையச் சொன்னாலே ரூட்டு மாறி எங்கெங்கோ போகுதே, லவ் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும்?
இனிமேல் இப்படி
சுத்தி வளைச்சு எழுதமாட்டேன்னு முதல்ல ஒரு resolution எடுக்கணும். முடில.
....ம், கதைக்கு வருவோம்.
அநேகமா, இனி நாள் தவறாம டைரி எழுதணும் அப்படின்னு ஒரு நூறு
வருஷம் தீர்மானம் போட்டிருப்பேன்.
பிள்ளையார் சுழியெல்லாம் ஜோராத்தான் போடுவேன்.
அப்புறம்தான் பிரச்னை ஆரம்பம்.
யார் படிச்சாலும் மாட்டிக்காத மாதிரி டைரி எழுதணும்ன்னா, கோட் வோர்ட் லதான் எழுதணும்.
அதுனால, உபத்திரவம் இல்லாம, பிள்ளையார் கோயிலுக்குப் போனேன், பால் அரைப்படி வாங்கினேன் அப்படின்னு ஏதாவது எழுத ஆரம்பிச்சா, அடுத்தநாளே, ரத்னா கேப் போய் ஒரு ஆறு இட்லி சாம்பார் சாப்பிட்டதை கோட் வோர்ட்ல எப்படி எழுதறதுன்னு தெரியாம, அறிவா எழுதினேன் பாருங்க,
"ரத்னா வாசம், கைபிடித்து இழுக்க, ரசனையோடு செலவு, ஆறுமுழம் மல்லிகைப் பூ"
எழுதிவெச்சுட்டு, திருதிருன்னு சுத்தியும் பார்த்துட்டு, கட்டிலுக்கு அடியில ஒளிச்சு வெச்சுட்டு, ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்தா, பொண்டாட்டி மாரியாத்தா கைல டைரி.
செருப்பை வாசலில் கழற்றிவிடுவது எவ்வளவு ஆரோக்கியமான பழக்கம்!
அப்புறம்தான் பிரச்னை ஆரம்பம்.
யார் படிச்சாலும் மாட்டிக்காத மாதிரி டைரி எழுதணும்ன்னா, கோட் வோர்ட் லதான் எழுதணும்.
அதுனால, உபத்திரவம் இல்லாம, பிள்ளையார் கோயிலுக்குப் போனேன், பால் அரைப்படி வாங்கினேன் அப்படின்னு ஏதாவது எழுத ஆரம்பிச்சா, அடுத்தநாளே, ரத்னா கேப் போய் ஒரு ஆறு இட்லி சாம்பார் சாப்பிட்டதை கோட் வோர்ட்ல எப்படி எழுதறதுன்னு தெரியாம, அறிவா எழுதினேன் பாருங்க,
"ரத்னா வாசம், கைபிடித்து இழுக்க, ரசனையோடு செலவு, ஆறுமுழம் மல்லிகைப் பூ"
எழுதிவெச்சுட்டு, திருதிருன்னு சுத்தியும் பார்த்துட்டு, கட்டிலுக்கு அடியில ஒளிச்சு வெச்சுட்டு, ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்தா, பொண்டாட்டி மாரியாத்தா கைல டைரி.
செருப்பை வாசலில் கழற்றிவிடுவது எவ்வளவு ஆரோக்கியமான பழக்கம்!
பேசாம அவளையும்
கூட்டிக்கிட்டே போய் ஒரு ரெண்டு டஜன் இட்லி வாங்கிக் கொடுத்திருக்கலாம்.!
அத மறைக்க மல்லிகைப்
பூன்னு எழுத, அடுத்து நடந்த நவரச
விசாரணைக்கு இடையில் பன்னண்டு தடவை பாத்ரூம் போயிட்டு வந்ததை அடுத்தநாள் டைரில
எழுதமுடியல.
விடியவிடிய
வராண்டாவுல மார்கழிப் பனியில படுத்துப்பாருங்க, உங்களுக்கும் அடுத்தநாள் நிமோனியாதான் வரும்.
பதினெட்டு மணிநேரம்
போனால்தான் சொல்லமுடியும்ன்னு சொல்லி அட்மிஷன் போட்ட டாக்டர் படுபாவி, நல்லா, லட்சணமா ஒரு கேரளத்துக் குட்டியையா ஊசிபோடச் சொல்லணும்?
நம்ம மூஞ்சி லட்சணம்
காட்டிக்கொடுத்து, “அவருக்கு
எது நடந்தாலும் வீட்டுலயே நடக்கட்டும் டாக்டர்”னு சொல்லி வீட்டுக்கே
கூட்டிக்கிட்டு வந்தாளே மகராசி.
எதுக்கும்
இருக்கட்டும்னு வீட்டுக்குப்போற வழியில இருபது தந்தி பாரம் வாங்கிக்கிட்டுப்
போய்ட்டோம்.
ஏதாவது ஆனா, சொந்தக்காரங்களுக்கெல்லாம் தந்தி கொடுக்கணுமே!
என் சாவு செய்திய
நானே இருபது தடவை எழுதி வெச்சுட்டு
பொ/போத்திக்கிட்டுப் படுத்தா, அனாவசியமாய் அரசாங்கத்துக்கு இருபது தந்தி பாரம் வீணாய்ப்போனது.
அவளோட மெட்டி பாக்கியம், எத்தனை நாளுக்குத்தான் தாலி பாக்கியம்?, பொழச்சுக்கிட்டேன்.
அவளோட மெட்டி பாக்கியம், எத்தனை நாளுக்குத்தான் தாலி பாக்கியம்?, பொழச்சுக்கிட்டேன்.
அந்த மாசம் முழுக்க,
தினமும் பத்து ருபாய் பேட்டா
வாங்கிக்கிட்டு ஆபிசுக்குப் போன சோகக்கதை இப்போ எதுக்கு.
ஒரு ஏழெட்டு வருஷம்
போய், இந்த ஆளுக்கெல்லாம் அவ்வளவு தைரியம் கிடையாதுன்னு
பொண்டாட்டிக்குப் புரிஞ்சதுக்கு அப்புறம், எதுக்கும்
இருக்கட்டும்னு பூட்டுப் போட்ட நோட்டு ஒன்னு வாங்கிக்கிட்டு வந்து, டைரி எழுத ஆரம்பிச்சேன்.
ஒரு வாரம் கழிச்சு, கோல நோட்டுக்கு அத எடுத்துக்கிட்டாங்க இந்திரா காந்தி.
சரி, இந்த வருஷம், தினமும் ஒரு கவிதை அப்படின்னு முடிவு பண்ணி, ஒரு வருஷம் நல்லா, காஸ்ட்லியா, வழுவழுன்னு வெள்ளைத்
தாள்ல ஒரு பெரிய நோட்டும், ஒரு க்ரோஸ் பேனாவும் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு
வந்தவுடனே, திருவாய்மொழி, “இந்த வருஷம் என்ன
தண்டசெலவு?”
பொன்மணிதான்
அதுக்கெல்லாம் லாயக்கு. நம்ம வீடு அதுக்கு ஒர்த்தே இல்லை!
நம்ம வைரமுத்து
ஆகவும் முடியாது, கண்ணை மேலே சொருகிக்கிட்டு பேட்டி கொடுக்கவும் முடியாது அப்படின்னு அப்பவே
உறைச்சிருக்கணும்.
ஒரு பத்து நாள்
மொட்டைமாடில போய் நிலா,
மேகம், புரட்சி, புஷ்பம் ன்னு ஏதேதோ எழுதியாச்சு.
சனி பக்கத்து வீட்டு
லச்சுமி வடிவத்துல வீட்டுக்குள்ள வந்துச்சு.
“உங்க ஆத்துக்காரர் நான் வாசல் தெளிக்கறச்சே மேல
இருந்து ஒருமாதிரி பார்க்கறார்.”
அன்னைக்கு நான்
வீட்டுக்குத் திரும்பிவரும்போது,
பையன மடியில போட்டு உக்காந்துருக்காங்க
வீட்டம்மா, பளபளப்பா ஒரு பேப்பர்ல குஷியா கக்கா
போயிட்டிருக்கு வாரிசு.
“ஏங்க, நீங்க ஏதோ கிறுக்கி
வெச்சிருந்தீங்கல்ல, அந்த நோட்ட, நான் தம்பி ஆய் போக
எடுத்துக்கிட்டேன்.”
இதைவிட ஒரு
கவிதைக்கும், கவிஞனுக்கும் வேற விமர்சனம் வேணுமா மக்களே!
கவிஞனை கழுத்தை
நெறிச்சு கொன்னுட்டு, லச்சுமி வீட்டுமேல ஒரு கல்லை விட்டெறிஞ்சுட்டு
வந்து டிவில வயலும் வாழ்வும் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.
இதுதான் வைரமுத்து
சோலோ ஆக உண்மையான
காரணம்!
அதுக்கப்புறம்
தொந்தரவே இல்லாம, காந்திமதியை சைட்டடிக்கமாட்டேன், பெருமாள் கோவில் ஐயர் பொண்ணுகிட்ட வழிய மாட்டேன் அப்படின்னு உபத்திரவம்
இல்லாத தீர்மானம்தான்.
ஆனா, பெருமாள் கோவில் விஷயத்துல மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி....
விடுங்க, இத மட்டும் ஆர்வமாக் கேப்பீங்களே!
விடுங்க, இத மட்டும் ஆர்வமாக் கேப்பீங்களே!
ரொம்பநாள் கழிச்சு, இந்த வருஷம் ஒரு ரெசல்யூசன் எடுத்து மூஞ்சிலையே துப்பு வாங்கின கதைதான் ஊரே
சிரிச்சுதே!
(மூஞ்சி நிறையத் துப்பின மகள்,
அதை ரசிச்சு சிரிச்ச
நல்லவன்,
ராகமாலினி,
வாழவந்தான்(Singh),
என் தங்கை கல்யாணி, சே, சங்கீதா,
அதைவிட பலமா துப்புன பெரிய மகள் LaksChumi,
போன்ற
விரோதிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,
சொல்லாமல்
மனதுக்குள் சிரித்த துரோகிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும் எம் ஆண்டவரே!)
இப்போ, இந்த நாள், இந்த நிமிஷம், நான் ஒரு
தீர்மானத்துக்கு வந்துட்டேன்.
இனி,
நாளை மற்றுமொரு நாளே,
எந்தப் புதுவருஷத் தீர்மானமும், மிச்சமிருக்கப்போற நூத்திச் சொச்சம் வருஷமும் எடுக்கறதில்லை.
எந்தப் புதுவருஷத் தீர்மானமும், மிச்சமிருக்கப்போற நூத்திச் சொச்சம் வருஷமும் எடுக்கறதில்லை.
இதுதான் இந்த வருஷத்
தீர்மானம்!
என்னைக்கு தற்கொலை
பண்ணிக்கலாம்ன்னு தோணுதோ,
அன்னைக்கு நிலா செஞ்ச
கேசரியை சாப்பிட்டு சூசைட்!
ஜெய் ஹிந்த்!!
No comments:
Post a comment