மற்றவர்களோடு பகிர்ந்தவை
இந்தியா அடிப்படையில் விவசாயநாடு. அதை
மறந்ததும், பசுமைப் புரட்சி என்று, ரசாயனங்களால் மண்ணை மலடாக்கியதும்பெரும் பிழை!
இனி, ஒரு துளி விவசாய நிலத்தையும் கட்டடங்களுக்குத் தாரைவார்ப்பதில்லை என்ற உறுதியும், கூட்டுப் பண்ணை விவசாயமுறை ஊக்குவிப்பும், ரசாயன உர ஒழிப்பும், நிச்சயம் நம்மை உணவு உற்பத்தியில் தன்னிறைவாக்கி, உலகை நம்மிடம் கையேந்த வைக்கும்.
நீர் மேலாண்மை, நிலவள மேலாண்மை என்று வெறும் ஏட்டில் இருக்கும் திட்டங்களை உறுதியோடு செயல்படுத்தினால் போதும்
இனி, ஒரு துளி விவசாய நிலத்தையும் கட்டடங்களுக்குத் தாரைவார்ப்பதில்லை என்ற உறுதியும், கூட்டுப் பண்ணை விவசாயமுறை ஊக்குவிப்பும், ரசாயன உர ஒழிப்பும், நிச்சயம் நம்மை உணவு உற்பத்தியில் தன்னிறைவாக்கி, உலகை நம்மிடம் கையேந்த வைக்கும்.
நீர் மேலாண்மை, நிலவள மேலாண்மை என்று வெறும் ஏட்டில் இருக்கும் திட்டங்களை உறுதியோடு செயல்படுத்தினால் போதும்
நில கையகப்படுத்தும் திட்டம் பற்றியது
மட்டுமே என் கவலை.
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிப் பயனில்லை!
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிப் பயனில்லை!
நம்மைவிடப் பலமடங்கு அறிவானவர்கள் அரசியல்வாதிகள்.
நாம் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் அவர்கள் இல்லை.
தலைமுறைகளைத் தாண்டி யோசிக்கும் போக்கு அவர்களிடம் குறைந்ததே இத்தனை கேட்டுக்கும் காரணம்.
உடனடி லாபம் என்பதைத்தவிர்த்துப் பார்த்தால், இயற்கை விவசாயமே நிரந்தரத் தீர்வு.
தலைமுறைகளைத் தாண்டி யோசிக்கும் போக்கு அவர்களிடம் குறைந்ததே இத்தனை கேட்டுக்கும் காரணம்.
உடனடி லாபம் என்பதைத்தவிர்த்துப் பார்த்தால், இயற்கை விவசாயமே நிரந்தரத் தீர்வு.
_________________________________________________________________________________
நிறைய
பிழைகள்இருக்கு ..அந்த கட்டுரையில் ..தயாராயிட்டு வாரேன் ..குறிப்பா விவசாயிகள்
விஷயத்தில்
சொல்லுங்கள். பிழைகளைத்
திருத்திக்கொள்ளலாம்!
கண்டிப்பா
வாசன் ஜி ..முழு லாங்கரா தாரேன் .இந்த சட்ட வடிவமே ..தமிழ்நாட்டு நிலகையக
சட்டத்தின் பிரதியாமே அப்படியா
தெரியவில்லை நண்பரே, ஒருவேளை
அதன் மேம்பட்ட வடிவமாக(?) இருக்கலாம்!
அப்படிதான்
சொல்றாங்க ..TN LAND ACQUISITION BILL 99 ஆம் ..தேடிட்டு இருக்கேன் படிச்சா
பகிர்கிறேன்
நான்
பிஜேபி பக்தன் இல்லை அதையும் முதல்லேயே சொல்லிடுறேன் ..தப்பான ஒரு எண்ணம் இருக்கு
நண்பர்கள் மத்தியிலே
அவசியம் பகிருங்கள். நீங்கள் எந்தக்கட்சி
என்பது நீங்கள் உண்மை சொல்வதைத் தடுக்கப்போவதில்லை!
இவர்களின்
செயல் இந்திய வளர்ச்சிக்கு பலமா இருக்கு ..அதை எதிர்ப்பது அரசியல் என்பதால்
மட்டுமே ஆதரவு
அது தான்
என் நிலை..இந்த சட்டம் NEED
OF THE HOUR என்று
நினைக்கிறேன்
இதில் அரசியல் பேசவோ, பாஜகவை எதிர்க்கவோ நான் வரவில்லை. நல்லன யார் செய்தாலும் வரவேற்போம்.
நான் எக்கட்சியும் சாராதவன்.
நிச்சயமாக
.தவறு என்றால் தவறு தான்.ஆனால் எ.கட்சிகள் கூவுவது போல இல்லை என்பதுஎன்
கருத்துமக்களை தூண்டிவிட போராட்டம் இந்த சட்டம் தவறில்லை..ஆனால் அதை சரியாக மாநில அரசுகள்
நடைமுறை படுத்த வேண்டும் அது தான் கவலை.
அதை மட்டும் எப்படி என்று நிறுவுங்கள்
நண்பரே. எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒப்பிட்டுச் சொல்லுங்கள்!
நண்பா
இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை ..நிலகையக படுத்தாமல் இங்கே ஏதேனும் ஒரு ஆணை
கட்டபட்டுள்ளதா
வளர்ச்சி
பணிக்கு நிச்சயம் சில அவசர அதிரடி சட்டங்களும் செயல்பாடும் தேவைதான்
நிலத்தின்
அடியில் மீத்தேன் அதிக அடர்த்தி அடைந்தால் என்னாகும் படிங்க http://earthsky.org/earth/new-explanation-for-siberias-mystery-craters …
காவிரி
டெல்டா பகுதில் ..அபிர்தமான பெட்ரோல் / தங்கம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்
..அப்போ உங்கள் நிலை
உங்கள் வாதங்கள் பிழையானவை. உண்மையான
வளர்ச்சி என்பது எல்லாத்துறைகளிலும் சீராக அடைவது. வளர்ச்சி என்பது தொழிற்சாலைகள்
மட்டும்தானா? விவசாயம் வளர்ச்சி சார்ந்ததல்லவா? உணவுப்பொருள் தன்னிறைவே, ஒருநாட்டின்
அடிப்படைவளம்.நல்லவேளையாக, நம் நாடு
அந்தவிசயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டது.ஒருநாள்உணவுப்பொருள் இறக்குமதி இல்லாவிட்டால்,
சிங்கப்பூரின் நிலை என்ன தெரியுமா நண்பரே? ஊழலும்,
ஜனத்தொகையும் மலிந்த நாட்டில், உணவுப்பொருள்
இறக்குமதி செய்ய நேர்ந்தால் என்ன ஆகும்? காவிரிப்
படுகையில் தங்கமும் பெட்ரோலும் கிடைத்தாலும், அறிவார்ந்தவர்
நிலை இதுவாகத்தான் இருக்கும் நண்பரே. கண்டிப்பாக,காவிரிப்
படுகையில் தங்கமும், பெட்ரோலும் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில்தான் இந்தஅவசரச் சட்டமா நண்பரே?
கிடைத்தால்
உங்கள் நிலை என்னவாக இருக்கும் ..என்பதே கேள்வி..
காவிரிப் படுகையில் தங்கமும் பெட்ரோலும்
கிடைத்தாலும், அறிவார்ந்தவர் நிலை இதுவாகத்தான் இருக்கும்
நண்பரே!
மீண்டும்
மீண்டும் விவசாய நிலங்களை கையக படுத்தவே இந்த திட்டம் என்பது போல பேசுகின்டீர்கள்
.மேலும் தொழிற்சாலைக்கு மட்டும் அல்ல..பல வளர்ச்சி பணிக்கு.அணைகளுக்கு,சாலைகளுக்கு .ரயில் பாதைகளுக்கு, குடியிருப்புகளுக்கு சேர்த்துதான் இந்த திட்டம் . industrialcorridors PPP projects, rural
infrastructure,affordable housing&defence.க்கு மட்டுமே அனுமதி வேண்டாம் மற்ற அனைத்து கையக படுத்தலுக்கும் 70%
உடன்பாடு வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் தேவை இல்லை
என்பது வெறும் 5 செக்டர்க்கு மட்டுமே..
அப்படியானால், விவசாய
நிலங்களைத் தவிர்த்து என்று ஒரு திருத்தம் கொண்டுவாருங்களேன்? 80% விவசாயிகள் அனுமதி பெறவேண்டும் என்ற ஷரத்து நீக்கம், நீர்வளப் பாசன
வசதியுள்ள நிலங்களுக்கு விலக்கில்லை என்பதெல்லாம் விவசாய நிலங்களைக் குறி வைக்காத மாற்றங்கள்தானா நண்பரே? கண்மூடி ஆதரிக்கும் நோக்கு தவிர ஏதும் உங்கள் வாதத்தில் இல்லை!
எங்கள் சோற்றில் கைவைக்காமல், உங்கள் "வளர்ச்சிப் பணிகளை" மேற்கொள்ளுங்கள்! முதலில்
தரிசுநிலங்களை மட்டும் வளரவையுங்கள்
தரிசு
நிலங்களுக்கே பல சிக்கல்கள் இருக்கு அதான் பிரச்சனையே
விவசாய நிலத்தை கையகப்
படுத்தமாட்டோம்.ரசாயனக் கழிவுகளை நிலத்தில் கொட்டமாட்டோம் என்று சொல்லுங்கள்
பார்ப்போம்!
இந்த
அரசால் ஏதேனும் நல்லது நடந்து விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்ற
கவலை ..அவசரம்
விவாதம் அது அல்ல. இது உங்கள் அரசியல்
கவலை. அதற்கு விவசாயிகளை பகடை ஆக்காதீர்கள். வளர்ச்சி வேறு, வீக்கம்
வேறு!
முதலில் திருத்தங்களை ஒழுங்காகப்
படியுங்கள். உங்கள்வளர்ச்சித் திட்டக் கழிவுகளைஅம்பானிவீட்டுத்
தோட்டத்தில்கொட்டுங்கள்
நீங்கள்தான் விவசாய நிலங்களைக்
கையகப்படுத்தப் போவதில்லையே!!!!!!!!!!!!! பிறகெதற்கு வாதம்!
அதை
தான் ஜி சொல்றோம்..இது வெறும் எ.க அரசியல் ..மக்களை குழப்பி மீன் பிடிக்கும்
முயற்சி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக