ஊடக அறங்களின் இன்றைய நிலை!
முதலில் உங்களுக்கு ஒரு கேள்வி!
உங்கள் வயது எழுபதுகளில்!
உங்கள் உற்ற நண்பர் இறந்து மூன்றாவது நாள்!
அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி!
இறுக்கமான சூழல்!
அங்கு ஏறத்தாழ நான்கு மணிநேரம் நின்றபடி இருக்கவேண்டிய நிலை!
அவர் நினைவைச் சுமந்தபடி வீட்டுக்கு வருகிறீர்கள்!
உங்கள் படித்த, அறிவு முதிர்ச்சியுற்ற மகன் உங்களை சாக்லேட் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்!
முதலில் நீங்கள் அன்பாக மறுக்கிறீர்கள்!
அவர் உங்கள் உணர்வையே மதிக்காமல் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்!
அவர் உங்கள் உணர்வையே மதிக்காமல் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்!
அந்த சூழலில் உங்கள் அன்பு மகனிடம் நீங்கள் குரல் உயர்த்திக் கோபப்படுவீர்களா?
இதற்கு ஆம் என்று பதில் சொன்னால் நீங்கள் சபை நாகரீகம் தெரியாதவர்!
இதுதான் இன்றைய நடுநிலைவாதிகளும் அறிவுஜீவிகளும் சொல்லும் செய்தி!
இன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, எங்கள் இதய தெய்வம், தமிழர்களின் விடிவெள்ளி, டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பதவியேற்றபோது கொடுத்த பேட்டி பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியல் அறிஞர்களுக்கும் சமூக சேவைக்கிடையே மறந்துபோயிருக்கும்!
"உங்களை மாதம் ஒருமுறை நான் சந்திக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு அப்போது விரிவாக பதிலளிப்பேன்" - இது ஜெ சொன்னது!
அப்படி எத்தனைமுறை அவர் பத்திரிக்கைக்காரர்களை சந்தித்தார்?
கடந்த நாலரை ஆண்டுகளில் எத்தனை நிருபர்கள் இதுபற்றி அவரிடம் கேள்வி கேட்டனர்?
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் இதுபற்றி எத்தனை அறிக்கைகள் விட்டுள்ளது?
தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள்? பற்றி இதுவரை ஊடகங்கள் விமர்சித்தது என்ன?
எத்தனைமுறை எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்பட்டன?
இந்த நான்கரை ஆண்டுகளாக எத்தனைமுறை மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டது?
எத்தனை மந்திரிகளின் பதவி பறிக்கப்பட்டது?
அதற்கான காரணத்தை எத்தனை ஊடகங்கள் மக்களுக்குக் கேட்டுச் சொல்லின?
விதி எண் 110ன் கீழ் வாசிக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் அமல் படுத்தப்பட்டன?
இதை ஊடகங்கள் அறியுமா?
முதலீட்டாளர்கள் மாநாட்டில் திரட்டப்பட்ட வரலாறு காணாத முதலீடுகள் வந்துவிட்டனவா?
அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டனவா? அவற்றின் இன்றைய நிலை என்ன?
மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி கட்டிய நூலகத்தை மூட இந்த அரசு ஏன் சுப்ரீம் கோர்ட் வரை போராடியது?
தமிழகத்தில் இயங்கும் நிலையில் இருக்கும் நூலகங்களின் எண்ணிக்கை என்ன? அவற்றுக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன?
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் எண்ணிக்கை எவ்வளவு?
சாராய வியாபாரம் தவிர வேறு ஏதாவது வருவாய் ஈட்டும் வேலைகளை இந்த அரசு செய்துள்ளதா?
சமீபத்திய வெள்ளத்தின்போது, சென்னையிலும் கடலூர் மாவட்டத்திலும் திறந்திருந்த அம்மா உணவகங்கள் எத்தனை? டாஸ்மாக் கடைகள் எத்தனை?
வெள்ள நிவாரணப் பணிகளில் அந்த ஏரியா கவுன்சிலர் முதல், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன?
முதல் மழை சேதத்துக்குப்பின் அடுத்து வந்த பெருமழை எச்சரிக்கைக்கு இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
ஏரி நீரைத் திறந்துவிடுமுன் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன? எத்தனைபேர் அரசால் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டார்கள்?
இதில் எத்தனை கேள்விகளை நாடாளும் மஹாராணியிடமோ, அவர் காலடி அடிமை அமைச்சர்களையோ, மாநகரத் தந்தையையோ, அதிகாரிகளையோ கேட்டன இந்த ஊடகங்கள்?
யாராவது ஒருவர் பதில் சொல்வார்களா?
தள்ளாத வயதில் படகில் ஏறிக்கொண்டு வெள்ளத்தில் நிவாரண உதவி செய்கிறார் ஒரு முதியவர்! அப்போது பேட்டியெடுக்க வந்ததை அன்போடு தடுத்துவிடுகிறார்!
அதன்பின் எத்திராஜ் கல்லூரியில் தன்னார்வலர்களுக்கு தன் கையொப்பம் இட்ட சான்றிதழ்கள் வழங்க அந்த முதியவர் ஏறத்தாழ நான்கு மணி நேரம் நின்றவாரே ஆயிரம் கையெழுத்துப் போட்டதோடு, அவற்றை வழங்கி வெளியே வருகிறார்!
ஒரு அரசு செய்யவேண்டிய வேலையை அவர் செய்கிறார்!
அதை அவர் செய்யாவிட்டாலும் ஏனென்று யாரும் கேட்கமுடியாது!
இந்த அவலமான சூழலில் ஒரு தறுதலை தன் வக்கிர அரிப்பைத் தணித்துக்கொள்ள ஒரு வக்கிரமான பாடலை, தன் பங்குக்கு வெள்ள நிவாரணமாக வழங்குகிறது!
அதைத் தூக்கிக்கொண்டு ஒரு அறிவு ஜீவி மைக்கைத் தூக்கிக்கொண்டு அந்த முதியவரிடம்போய் பல்லிளித்துக்கொண்டு "... பாடல் பற்றி உங்கள் கருத்தென்ன?"
அவர் முதலில் சொன்ன பதில், "இந்த இடத்தில் இந்தக் கேள்வி தேவைதானா?"
திரும்பத்திரும்ப அவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது!
அவர் கோபப்படுவதை தன் வெற்றி என்று அசிங்கமாய் இளிக்கிறது அந்த ஜந்து!
(இது மிகையாய்ச் சொல்லவில்லை என்பது அந்தப் பேட்டியைப் பார்த்த அனைவரும் ஒப்புக்கொள்வர்)
கூட நின்ற மற்ற நிருபர்களும் அதைத் தடுக்க முயலவில்லை!
அதன்பிறகு அவர் கோபத்தில் வெடிக்கிறார்! "உனக்கு அறிவிருக்கறதா?"
உடனே ஊடக சுதந்திரம் சிலிர்த்து எழுகிறது!
இளையராஜா மன்னிப்புக்கேட்க வேண்டும்!
அந்த அறிக்கையின் கீழ்த்தரமான ஒரு அபத்த வாசகம்!
"சிம்பு இயற்றிய பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்காமல் நிருபரிடம் கோபித்துக்கொண்டது கண்டிக்கத் தக்கது!"
அடத் தறுதலைகளா!
எவன் எழுதியதற்கு யார் மன்னிப்புக் கேட்பது?
அந்தக் கேள்விக்கு இளையராஜா என்ன பதில் சொல்லியிருந்தாலும் உங்கள் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை ஊரே அறியும்!
"வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் அனிருத் மீது இளையராஜா பாய்ச்சல்!!"
இதுதானே உங்கள் மானம் கெட்ட நோக்கம்?
ஏன் இந்தக் கீழ்த்தரமான வன்மம்?
இளையராஜாவை கண்டித்த அந்த அறிக்கை ஒரு ஓரத்திலாவது அந்த நிருபரின் செயலைக் கண்டித்திருந்தால் உங்கள் நடுநிலை வேஷம் கொஞ்சமாவது பலித்திருக்கும்!
உங்களைவிட, ராத்திரியில் சந்து முனைகளில் நின்று அழைக்கும் விபச்சாரிகள் மேல்!
சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையை நடத்திய பாரதியின் வழி வந்தவர்கள் நீங்கள்தானா?
உங்கள் முதுகெலும்புகளை எந்த விலைக்கு விற்று இந்த எருமைத் தோலைப் பெற்றீர்கள்?
அரசின் தோல்வியை விமர்சிக்க, கேள்வி கேட்க வக்கற்ற பேடிகளின் கூட்டம் ஒரு வெள்ளந்தி முதியவரை சீண்டிப்பார்த்து தங்கள் அசிங்கமுகத்தை மறைக்கப் பார்க்கிறது!
ஊடகங்கள் ஜெயலலிதாவை கேள்வி கேட்கப் பயப்படுவதன் உண்மைக் காரணம் பணமோ, பயமோ என்பதை விட அப்பட்டமான இனப்பற்ற என்பதே முற்றிலும் உண்மை!
பேரிடர் மேலாண்மையில் இந்த அரசின் படுதோல்வியை மறைக்க ஊடகங்கள் கையாளும் கீழ்த்தர யுக்தியே அந்தப் பாடலுக்குத் தரும் முக்கியத்துவமும் போலி எதிர்ப்பும்!
சிம்பு பாடிய பாடல் சத்தியமான கலாச்சாரச் சீரழிவுதான்!
ஆனால் அரசு நடத்தும் சாராயக் கடைகளும், உங்கள் அறிவார்ந்த சீரியல்களும் செய்யும் சீரழிவின் லட்சத்தில் ஒரு பங்கு அது!
இன்றும் தர்மபுரி ஏரியாவில் ஜாதி வன்முறைகள் நடப்பதும், தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் நினைவுநாள் வெறியாட்டங்களும் ஊடகங்கள் அறியாதனவா?
விஷ்ணுப்ரியா யாரென்பதாவது ஊடகங்களுக்கு நினைவிருக்கிறதா?
மக்கள் மழை, வெள்ளத்தில் உயிரையும் உடமைகளையும் இழந்து வழியின்றி நிற்கையில் முதல்வர் மக்களையோ, செய்தியாளர்களையோ சந்திக்காமல் வாட்ஸ்ஆப்பில் உளருகிறார்!
பெட்டை ஊடகங்கள் பீப் பாடலைத் துரத்தித் திரிகின்றன!
ஒருவேளை ஊடகங்களின் தீட்சண்யம் குறைந்துதான் போனதோ என்று நம்பித் தொலைத்தாலும், கருணாநிதி கையில் சிகப்புக் கயிறை உன்னித்துப் பார்த்து கார்ட்டூன் வரைகிறது தமிழர்களின் நாடித்துடிப்பு!
அந்த தீட்சண்யம் ஏன் ஊடகங்களே அரசின் அவலத்தைப் பார்க்கையில் இல்லை?
இத்தனை கேள்விகளையும் உங்களை ஒற்றை எழுத்தில் கேட்டிருக்கிறார் விஜயகாந்த்!
.....தூ!
அதைக் கேட்கும்போது அவர் கேட்ட நியாயமான கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல்,
எப்போதும் நிதானத்தில் இல்லாதவர் என்று அவரைக் குறிப்பிட்டு, பழக்கதோஷத்தில் மா'பெறும்' போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிக்கை விட்டிருக்கிறது நிதானம் மிக்க பத்திரிக்கையாளர் சங்கம்!
இளையராஜா, விஜயகாந்த் இருவரும் நடந்துகொண்ட முறை தவறு என்று உங்களுக்காக தமிழகமே குரல் கொடுத்திருக்கும் உங்கள் அறத்தை நீங்கள் பேணியிருந்தால்!
அவர்கள் செய்கையை நியாயப்படுத்தியது உங்கள் அசிங்கமான செயல்பாடு!
உங்களைத் துப்பியது விஜயகாந்த் அல்ல!
ரோஷமுள்ள ஒவ்வொரு குடிமகனும்!
ரோஷமுள்ள ஒவ்வொரு குடிமகனும்!
இதைத் துடைப்பது அவ்வளவு எளிதல்ல!
இனியாவது யாருக்கும் அஞ்சாத நெறிமுறைகளை ஓரளவேனும் மீட்டெடுக்கப் பாருங்கள்!
இனியாவது யாருக்கும் அஞ்சாத நெறிமுறைகளை ஓரளவேனும் மீட்டெடுக்கப் பாருங்கள்!
அதுதான் உண்மையான நேர்மையாளர்கள் செய்ய வேண்டியது!
இயலாதெனில் துப்புவதைப் பொருட்படுத்தாமல் சிம்பு வீட்டுப் படுக்கையறைக்கு ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்!
இணைப்பு:
தங்கத் தாரகையின் அறிவார்ந்த, பொறுமையான நேர்காணலின் எழுத்து வடிவம்!
No comments:
Post a comment