விடிந்தால்
சுதந்திரதினம்!
தெருவெல்லாம்
பிளாஸ்டிக் கொடிகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்!
மக்களும் அதை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டு போவதை ஒட்டாமல் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தேன்!
தலைவலி
மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது!
பாழாய்ப்போன
மைக்ரேன்!
அன்னபூர்ணாவில்
ஒரு காஃபி குடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற நினைப்பிலேயே நடந்துகொண்டிருந்ததால் கவனிக்கவே இல்லை!
ஏறத்தாழ
மோதிக்கொண்ட பின்புதான் பார்த்தேன் - குறுக்கே கை நீட்டித் தடுத்த
கிழவியை!
எழுபது
வயது இருக்கும்!
பார்க்கும்போதே
தெரிந்தது, நன்றாக வாழ்ந்துகெட்ட குடும்பத்துப் பெண் என்பது!
சமீப
காலத்தில் மிகப்பெரிய சுகக்கேடு வந்த உடம்புபோல் ரொம்பவுமே தளர்ந்திருந்தது!
அனிச்சையாக
வாயில் வந்துவிட்டது " சில்லறை இல்லை போங்கம்மா!"
தம்பி,
நான் பிச்சைக்காரி இல்லை!
மன்னிச்சுக்கங்கம்மா!
நான் ஏதோ நியாபகத்தில் சொல்லிவிட்டேன்!
என்ன
வேணும்?
உன்னோடு
நானும் காஃபி குடிக்க வரலாமா?
பயப்படாதே,
உனக்கும் சேர்த்து நான் பில் பே பண்ணிடறேன்!
பார்றா!
ஒரு
நிமிடம் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!
நான்
காஃபி குடிக்கத்தான் போறேன்னு இந்தம்மாவுக்கு எப்படித் தெரியும்?
எனக்கும்
தலைவலி தம்பி, உன் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது! என்கிட்டே வேஸோகிரைன் மாத்திரை கூட இருக்கிறது!
அடப்பாவி!
இதென்ன சுவாரஸ்யமான கிழவி போல என்று புன்னகைத்துக்கொண்டே கூட நடக்க ஆரம்பித்தேன்!
லெட்
அஸ் சிட் இன் தட் ஸீட்!
அட!
இங்கிலீஸ் லாம் பேசறீங்க?
நம்ம
ஊர்ல இங்கிலீஸ் பேசலேன்னாதான் ஆச்சர்யம் தம்பி!
இப்போது
எனக்கு சுவாரஸ்யம் கூடியிருந்தது!
சொல்லுங்கம்மா,
வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா?
இல்லை,
ரெண்டு காஃபி மட்டும் சொல்லு! ரெண்டும் ஸ்ட்ராங்கா சர்க்கரை இல்லாமல்!
அம்மா,
உண்மையைச் சொல்லுங்க, உங்களுக்கு என்னை முன்னமே தெரியுமா?
தெரியும்!
உன் பிளாக் சிலது படித்திருக்கிறேன்!
என்
பெண்டாட்டிக்கு யாராவது புத்தி சொல்லுங்களேன் என்று எழுதியவன்தானே நீ!
இப்போ,
எனக்கு தலைவலி போன இடம் தெரியவில்லை!
மனசு முழுக்கக் கிலி! ஏதோ ஒரு மந்திரவாதியோ, சூனியக்காரியோ என்று ஓடத் தயார் நிலையில் இருக்கையின் விளிம்புக்கு நகர்ந்தபோது என் கையைப் பிடித்து சொன்னார்!
தம்பி,
நான் உனக்கும் அம்மா போலத்தான்! சமீபகாலமா என்னோட பேச ஆள் இல்லாம இன்னைக்கு உன்னைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தோசமா பேசவந்தேன்!
பயப்படாதே,
இந்தக் கிழவி உன்னை என்ன செய்துவிடப்போகிறேன்? அதுவும் இந்த சந்தைக்கடை கூட்டத்தில், பட்டப்பகலில்?
இப்போது
எனக்கே விளையாட்டில் கொஞ்சம் ஈடுபாடு வந்துவிட்டது! பாப்போம் எதுவரை போகுமென்று!
சொல்லுங்க!
இல்லை,
இப்போ உன் நிலைப்பாட்டில் ஏதாவது மாறுதல் இருக்கா தம்பி?
தலைவர்களை
நாடகக் கொட்டகையில் தேடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டது போல தோணுது?
சமீபத்தில்
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் பற்றி பெரிய பதிவு வேறு?
இல்லையே
அம்மா? அவர்கள் வருவதுதான் வழி என்று நான் சொல்லவில்லையே?
சரி,
வந்தால் என்ன பாதிப்பு என்கிறாய்?
நல்லது!
இன்றைக்குப் பொழுது
இந்தக்
கிழவியோடு
என்றானபின்
அதை
பேசியதாவது
கழிப்போம்!
ரஜினியோ, கமலோ, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்! ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல!
ஏன் தம்பி?
இல்லை,
இப்போது அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தாலோ, ஏதாவது கட்சியில் இணைந்தாலோ சட்டசபை கலைக்கப்பட்டு உடனடியாகத் தேர்தல் அறிவிக்கப்படும்!
அப்படி
நடக்கும் பட்சத்தில், இருவருமே, முதல்வர் வேட்பாளராகத் தங்களை முன்னிறுத்தக் கால அவகாசம் இல்லாத நிலையில், வேறு யாரையாவதுதான் ஆதரித்துத் தீரவேண்டும்.
இல்லாவிட்டால்
அது நிச்சயம் வாக்குகள் சிதறி அதிமுக பாஜக கூட்டணிக்கே சாதகமாகும்!
அப்படி
அவர்கள் வேறு யாரையும் ஆதரித்தால், அதன்பின் தன்னை முன்னிறுத்த வாய்ப்பே இல்லாமல் போகும்!
தனிக்கட்சி
ஆரம்பித்தபின், வேறு ஒருவரை முதல்வராக்க வாக்குக் கேட்டுவந்த யாருமே பின்னாளில் தங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வெல்லமுடிந்ததாய் சரித்திரமே இல்லை அம்மா!
இது
அன்புமணி, சீமான் போன்ற தன்னளவிலான முதல்வர் வேட்பாளர்கள் மட்டுமன்றி அரசாளத் துடிக்கும் நடிகர்களுக்கும்
பொருந்தும்!
அதுதான்
எஸ் எஸ் ஆர் முதல், சிவாஜி, பாக்கியராஜ், வழி இன்று விஜயகாந்த்துக்கும் நடந்தது!
அந்த
முடிவை எடுக்குமளவு இருவருமே முட்டாள்கள் கிடையாது!
ஒருவர் புத்திசாலி
வியாபாரி,
இன்னொருவர்
தேர்ந்த
சந்தர்ப்பவாதி
என்பது
என்
கணிப்பு!
அப்போ,
அவர்கள் அரசியலுக்கே வரக்கூடாது என்கிறாயா?
இல்லை
அம்மா!
அப்படி
அவர்கள் வர நினைத்தால், இப்போது
யார் வரக்கூடாது என்பதை மட்டும் தங்கள் ரசிகர்களுக்குத் தெளிவு படுத்தட்டும்!
தேர்தல்
முடிந்து புது, செயல்படும் அரசு, மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் தலைமையில் அமைந்தபின் கட்சி ஆரம்பிக்கட்டும்!
நேர்மையான
விமர்சனங்களோடும், விவாதங்களோடும் ஆட்சியை எதிர் கொள்ளட்டும்!
அடுத்து
வரும் தேர்தலில் தங்கள் கொள்கைகளை, தாக்குப்பிடிக்கும் தன்மையை நிரூபித்த நிறைவோடு, முதல்வர் வேட்பாளராக மக்களை சந்திக்கட்டும்! இதுதான் இப்போது என் கருத்து!
நடிகனே
மீண்டும் நாடாளட்டும் என்று நீயும் நினைக்க ஆரம்பித்துவிட்டாய் போல!
பொல்லாத
கிழவிதான்!
இதில்
என் விருப்பம் எங்கு வருகிறது அம்மா?
மக்கள்
விரும்பும் வேறு தலைவர்கள் எட்டியவரை உருவாகவில்லையே தாயே? இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து போலும்!
ஏன்
உருவாகவில்லை என்று யோசித்தாயா?
ஒரு
சின்னக் கேள்விக்கு மட்டும் பதில் சொல் போதும்!
ரத்தம்
வரத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடித்தபின், மாரை அறுத்துக் கறி சமைத்து ஊரெல்லாம் விருந்து வைத்தீர்கள் !
தங்கள்
தாயின் பால் சுரப்புக்கான போஷாக்கு வழிகளை செவ்வனே செய்ததோடு, உங்களுக்கு சில்லறையை வாரி இறைத்து , முலைக்கறி தின்று கொழுத்த அண்டை வீட்டானிடம் இன்று ஒரு துளி தாய்ப்பாலுக்கு மண்டியிட்டுக் கெஞ்சுகிறீர்கள்!
இது
ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?
கேரளாவில்
மணல் அள்ள மட்டுமல்ல, போர்வெல் போடவும் தடை உண்டு என்பது உனக்குத் தெரியுமா?
உங்கள்
ஊரில் என்ன செய்கிறீர்கள்?
லாரி,
ரயில், கப்பல் என்று எது கிடைத்தாலும் மணலைக்கொட்டி ஊரூராய் நாடு நாடாய் விற்றுக் கொழுப்பதை கை கட்டி வேடிக்கை
பார்ப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
சினிமாக்காரனுக்கு
கொடி பிடிப்பதும்
தொலைக்காட்சி
நிகழ்ச்சிக்குப் பொங்குவதும்,
சமயம்
கிடைத்தால், கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த
தமிழ் என்று புரியாமலே பழம்பெருமை பேசுவதும்
நிகழ்காலம் எதிர்காலம்
எதைப்பற்றி
எந்த
சுரணையும்
இல்லது
இருப்பதும்
குணமாகிப்போன
உங்களை
ஆள
மஹாத்மாவும்
மண்டேலாவுமா
வருவார்கள்?
உங்கள் தகுதிக்கு
இவர்களே
அதிகம்!
இவ்வளவு
காரமாய் அரசியல் பேசுமளவு, உங்களுக்கு என்னம்மா தனிப்பட்ட பாதிப்பு?
என்
கதை சொல்லிக்கொண்டிருப்பதாய் வேறு யாரைப்பற்றியோ பேசுகிறேனோ?
சரி,
என் கதை சொல்கிறேன்!
தனித்தனியாய்
அனுப்பினால் இவர்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள் என்றுதான், இந்தமுறை என் ஒற்றை மகனுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து மத்திய பஞ்சாயத்துக்கு அனுப்பினேன்!
உள்ளூர்
பிரச்னையை ஒரு பெண்மணி பார்த்துக்கொள்வார் என்றிருந்தேன்!
மத்தியப்
பஞ்சாயத்துக்குப் போனவன், அங்கே ஆளும் முதலாளி முன் பாட்டுப்பாடி, பல்டி அடித்து, கோமாளி வேஷம் போட்டு குரங்கு வித்தை காட்டிக்கொண்டிருக்கிறான்!
உள்ளூர்ப்
பிரச்னையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பெண்மணி "எப்படியோ" செத்துப்போக, அவர் வளர்த்த மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டு சண்டை போட, பசிகொண்ட ஓநாய் பாய்வதற்குக் காத்திருக்கிறது!
இன்னும்
எத்தனை நாள் என்னால் ஒற்றையாகப் போராடமுடியும் என்று தெரியவில்லை!
அம்மா,
உண்மையில் நீங்கள் யார்? உங்கள் பிள்ளைகள் எங்கே?
நானா? நான்
கோடிக்கணக்கில்
பிள்ளைகள்
பெற்றும்
உருப்படியாய்
ஒன்றைக்கூடப்
பெறாத
மலடி.
மீண்டும் ஒருமுறை
என்
பிள்ளைகள்
சுய
அடையாளம்
அற்றுப்போய்
மந்தைகள்போல்
மதராஸி
என்று
அழைக்கப்படும்
கொடுமையையும்
பார்த்துவிட்டுத்தான்
சாவேன்
என்று
நினைக்கிறேன்!
அம்மா,
நான் நினைப்பது உண்மையானால், நாளை உங்கள் சுதந்திரத்துக்கு எழுபது வயது பூர்த்தியாகிறது - அப்படித்தானே?
படுத்த
படுக்கையாக சாகக் கிடப்பவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒரு கேடா!
இது
உங்களுக்கு இன்னுமொரு விடுமுறை நாள்தானே - சிறப்புத் திரைப்படங்கள் பார்க்க!
அதற்குள்,
சர்வர் வந்து பில் கொண்டுவரவா என்று கவனம் கலைக்க,
சரியென்று
அவரை அனுப்பிவிட்டுத் திரும்பும்போது எதிர் இருக்கை காலியாக இருந்தது!
பில்
தொகையும், அதற்கு பேப்பர் வெயிட்டாக இரண்டு வேஸோக்ரெய்ன் மாத்திரைகளும் டேபிளில்!
சாகும்வரை அந்தத் தாய் தன் வாக்குறுதிகளை மீறப்போவதில்லை!
பிள்ளைகள் நாம்தான் ......
No comments:
Post a comment