ஒரு ஒல்லியான கருப்பு உருவம் 1975ல் அன்னக்கிளி மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தது!
பஞ்சு அருணாச்சலம் பற்றவைத்த நெருப்பு பட்டி தொட்டியெல்லாம் பற்றியெரிய ஆரம்பித்தது!
திரை இசையில் ஒரு புயல் வந்து தென்றலாய் வீசிக்கொண்டிருந்த காலம்!
அதுவரை கேட்காத துள்ளல் நாட்டுப்புற இசை ஒருபுறம்!
மெல்லிசையா, சுத்தமான கர்நாடக இசையா, அன்றி மேற்கத்திய இசை கலந்த ஃப்யூஸனா எது கேட்டாலும் அந்த ஒற்றை ஆர்மேனியப்பெட்டி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது!
மேட்டுக்குடி இசை விமர்சகர்களுக்கு நல்ல நாளிலேயே சிலர் மீது ஒவ்வாமை!
ராஜா மீது ஒவ்வாமையோடு மலையளவு பொறாமையும்!
சில எலைட் வார இதழ்களில் சங்கீத மஹாவித்வான்கள், விமர்சகர்கள் சிலர் பலமுறை தங்கள் எரிச்சலை வெளிப்படையாகவே காட்டிக்கொள்வதுண்டு!
அவர்களுக்கு இளையராஜா என்றால் டப்பாங்குத்து மட்டுமே!
அதற்குமேல் அந்த ஆளிடம் வேறு சரக்கு கிடையாது என்று எள்ளல் வேறு!
மொட்டைக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி!
சாமியார் மனசுக்குள் அந்த ஊமைக்குசும்பு காத்துக்கொண்டே இருந்தது!
1981ல் ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது!
ரங்கராஜன் இயக்கத்தில், கமல், கண்ணுக்கு நிறைவான மாதவிக்குட்டி நடித்த முழுநீள நகைச்சுவைப் படம்
- எல்லாம் இன்பமயம்!
புகுந்து விளையாட அற்புதமான களம் ராஜாவுக்கு!
அட்டகாசமான ஒரு சிச்சுவேஷன்!
ஒரு பணக்காரப் பையன் குப்பத்துப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள, குப்பத்திலிருந்து பெண் வீட்டு சார்பாக கமல் ஆடிப்பாடுவதுபோல்!
வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராஜா!
பாடல் ஆரம்பிக்கும்போதே, தன் மீதான விமர்சனத்தை மறைமுகமாக அல்ல, நேரிடையாகவே எடுத்துக்கொண்டு ஒரு உரையாடல்!
“டாய்!!
நிறுத்துங்கடா!!
நிறுத்துங்கடா டாய்!!
நிறுத்துங்கடா அல்லாரும்!!
இன்னாடா அடிக்கிறீங்க மோளம்
இங்க கல்யாணம் நடக்குதா
கரகம் ஆடுறங்களா!??
பெரிய பெரிய ஆப்பீசருலாம்
வராங்கடா இங்க.!!
சங்கராபரணம் மீஜிக்கு மாரி
டீஜண்டா அடிங்கடா”.
நிறுத்துங்கடா!!
நிறுத்துங்கடா டாய்!!
நிறுத்துங்கடா அல்லாரும்!!
இன்னாடா அடிக்கிறீங்க மோளம்
இங்க கல்யாணம் நடக்குதா
கரகம் ஆடுறங்களா!??
பெரிய பெரிய ஆப்பீசருலாம்
வராங்கடா இங்க.!!
சங்கராபரணம் மீஜிக்கு மாரி
டீஜண்டா அடிங்கடா”.
உடனே
ஒரு டிபிக்கல் வெஸ்டர்ன் நோட்ஸ்!
“மோளம் வோணும்ன்றவன் அத்த எட்த்துக்கட்டும்.
சங்கீதம் வோணும்ன்றவன் இத்த
எட்த்துக்கட்டும்!”
அதற்குப்பின் ஒரு அக்மார்க் இளையராஜா நாட்டுப்புறக் கொட்டு!
உடாதே, புடிச்சுக்கோ என்ற டிபிக்கல் குப்பத்துக் கூவல்!
தொடர்ந்து குப்பத்து பாஷையிலேயே முழுக்க தப்பட்டை மற்றும் மேற்கத்திய இசைக்கலவையில் பின்னணி இசையோடு பாடல்!
இதில்தான் அந்த மேட்டுக்குடி மடிசார் விமர்சகர்களுக்கு வைத்தார் ஒரு பலமான குட்டு!
கொஞ்சம்கூட, சம்பிரதாயம் விலகாத சுத்த கர்நாடக இசை மெட்டில் மொத்தப்பாட்டும்!
பிலஹரி ராகத்தை ம்யூசிக் அகாடமி மேடையில் சம்மணம் போட்டுக்கொண்டு நிரவல் சுரம் பாடும் வித்வான் கூட கொஞ்சம் ஸ்தாயி மாறும்போது பிசிறடிக்கலாம்!
இந்தப்பாட்டு முடியும்வரை ஒரு இடத்திலும் தடம் மாறாத சுத்தமான பிலஹரி!
அதற்குப்பின் அந்த விமர்சக ஜாம்பவான்கள் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்கவில்லை!
இசை என்று வந்துவிட்டால் எல்லா ஏரியாவிலும் ராஜாதான் சக்கரவர்த்தி!
No comments:
Post a comment